Advertisment

"மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது"- எடப்பாடி பழனிசாமி காட்டம்!

publive-image

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது.

Advertisment

இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்குபல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tweets admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe