மாண்டஸ் தாண்டவம்; சென்னையில் 60 இடங்களில் மரங்கள் சாய்ந்தது

Mantus leap; Trees fell at 60 places in Chennai

பல்வேறு கட்டநகர்வுகளுக்குபிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகேமாண்டஸ்புயலின் வெளிவட்ட பாதைகடக்கதுவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில்மாண்டஸ்புயல் முழுவதுமாககரையைகடந்தது.இதனைசென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துபேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், 'இன்று மதியம் காற்றழுத்த தாழ்வுமண்டலமாகபுயல்வலுவிழக்ககூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும்'எனதெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக வீசிய பலத்த காற்றுகாரணமாகசென்னையில் 60 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளது. புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தாம்பரம் மாநகராட்சியில் மட்டும் 26 மரங்கள் சாய்ந்துள்ளதாக ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் விழுந்த மரங்கள் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 68 மரங்கள், 5 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், 3படகுகள் சேதம்அடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு கால்நடைகள் இறந்த நிலையில், 10 குடிசைகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது.

tree
இதையும் படியுங்கள்
Subscribe