Advertisment

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் கைது!

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானை வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக காவல் துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார். அப்போது அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார்.

Advertisment

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.

எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என கூறினார்.

இதையடுத்து, வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சேலம் தீவெட்டிப்பட்டு காவல் துறையினர் இன்று அதிகாலை சென்னை சூலைமேட்டில் உள்ள வீட்டில் வைத்து நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்தனர்.

highways
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe