Skip to main content

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்..!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

mannarkudi farmers demand and supports farmers who are in delhi

 

விவசாயிகளை பாதிக்கக்கூடிய வேளாண் சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப்பெறவேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பேரணியாக வந்து மன்னார்குடி தலைமை தபால் நிலயத்தை முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும், தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக டெல்லியில் பசியோடும், குளிரோடும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்தவகையில்  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தலைமை தபால் நிலயத்தை நோக்கி பேரணியாக வந்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 150க்கும் மேற்பட்டோர், தபால் நிலையத்தை முற்றுகையிட்டு  மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி முற்றுகையிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

 

உழவர்கள், அரசு கொள்முதல் நிலையத்திலிருந்து தனியார் கொள்முதலுக்குச் செல்வார்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு கொள்முதலுக்கு யாரும் வராத காரணத்தினால் அதை மூடுகிறோம் எனச் சொல்லி அரசு கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டால் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத நிலையில் உழவர்கள் பொருட்களை வீட்டில் சேமித்து வைக்க முடியாது. அதனால் கார்பரரேட் நிறுவனங்கள் கேட்கும் அடிமாட்டு விலைக்கே விற்கவேண்டிய அவல நிலை ஏற்படும்.  எனவே திருத்தச் சட்டத்தால் உழவர்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்பது பச்சைப் பொய்.  கார்பரேட்களிடம் விவசாயிகளை அடகு வைப்பதே மத்திய அரசின் திட்டம்.” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story

சி.எஸ்.கே அணி வெற்றி; அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய இளைஞர்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

After CSK's victory, young man showed his respect and paid his dues to God

 

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்ட ரசிகர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

ஐபிஎல் தொடரில் 16வது சீசனுக்கான இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதி போட்டி நடைபெறும் என உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டு கிரிக்கெட் ரசிகர்களின் சந்தோஷத்திற்கு ஒரு நாள் முட்டுக்கட்டை போட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஐபிஎல் போட்டியோடு ஓய்வு பெறுவார் என பேசப்பட்டதால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்களை செய்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன் தேவை என்கிற உச்சபட்ச பரபரப்புக்கு மத்தியில் சிக்ஸர், ஃபோர் என அடித்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார் ஜடேஜா. இந்த வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

After CSK's victory, young man showed his respect and paid his dues to God

 

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இளந்தமிழன் என்கிற இளைஞர் தோனியும் சென்னை அணியும் வெற்றி பெற வேண்டும் என வேண்டி உள்ளூர் மாரியம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து 12 அடி நீளம் கொண்ட அலகு குத்தி கவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார். இது குறித்து இளந்தமிழன் கூறுகையில், “2011 இல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை பெற்று தந்தபோதே தோனி மீது எனக்கு அளப்பரிய ஆர்வம் வந்தது. அவர் கலந்து கொள்ளும் மேட்சை நான் மறக்காமல் பார்ப்பேன். இது இறுதி ஆண்டாக இருக்கும் என பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி இருக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பமாக இருந்தாலும், இந்த முறை சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுதலாக இருந்தது. சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டேன் சென்னை அணி வெற்றி பெற்றதும் அந்த கடனை தீர்த்து இருக்கிறேன்" என்கிறார்.