மணிப்பூரில் பழங்குடி இன பெண்களின் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ பங்கேற்றார்.