Advertisment

மணிப்பூர் கொடூரம்; போராட்டத்தில் இறங்கிய கல்லூரி மாணவிகள்

 Manipur brutality; College students who went on strike

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ரெகுநாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து கண்டன பதாகைகளுடன் ஊர்வலமாக வந்து கல்லூரி வாசலில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல அடுத்தடுத்த கல்லூரிகளிலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது.

Advertisment

struggle Pudukottai manipur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe