Skip to main content

பாலியல் தொல்லை... மான்கராத்தே திரைப்பட நடிகை போலீசில் புகார்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

 

சின்னத்திரையிலும், சினிமாவிலும் சிறு வேடங்களில் நடித்து வந்தவர் சமிக்சா. மான்கராத்தே படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டு குழந்தைகளுடன் சென்னை கிழக்கு முகபேரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சொந்தமாகவும் செனாய் நகரில் அழகு நிலையம் நடத்திவருகிறார். 

 

 police

 



இந்த நிலையில் சென்னை திருமங்கலம் காவல்நிலையத்தில் அவர் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சென்னையில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று எனது இரண்டு ஆண் பிள்ளைகளோடு வாழ்ந்து வரும் எனக்கு பல வகையிலும் பிரச்சனை ஏற்பட்டது. 
 

பெண்கள் அழகு நிலையம், யோகா பயிற்சி கலையை வைத்து சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தேன். சின்னத்திரை மற்றும் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடத்து வந்தேன். இப்படிப்பட்ட நேரத்தில் சரவணன் சுப்பிரமணி என்பவர் என்னிடம் அறிமுகமாகி பழகினார். என்னை திருமணம் செய்தாக கூறினார். கடந்த 2014ல் திருமணம் செய்து கொண்டோம். 

 


 

2015ம் ஆண்டு கருவுற்றேன். உடனே சரவணன் எனக்கு அபார்ஷன் செய்துவிட்டார். தொடர்ந்து ஆறு முறை கருவுற்றும் என்னை அடித்து துன்புறுத்தி அபார்ஷன் செய்துவிட்டார். அதன் பிறகு பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். 2016ல்தான் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. இதுபற்றி கேட்கும்போது, முதல் மனைவிக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னார். ஆனால் நாளடைவில் இதுபற்றி விசாரிக்கும்போது அவர் தனது முதல் மனைவியை பிரியவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் எனது பிள்ளைகளோட தனியாக வசிக்க வந்துவிட்டேன். 
 

தொடர்ந்து எங்கு சென்றாலும் என்னை தொடர்ந்து வந்து என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று அடியாட்கள் மூலமாக தொடர்ந்து என்னையும் எனது மகன்களையும் மிரட்டி வருகிறார். பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதுவரை ஆறு முறை நான்  என் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். சரவணன் சுப்பிரமணியும், அவரது முதல் மனைவியும் பல பெண்களை இப்படி ஏமாற்றியுள்ளார் என்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சமிக்சா. இது தொடர்பான விசாரணையை  இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரித்து வருகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.