Skip to main content

மாண்டியா டூ தஞ்சாவூர்... இப்போதும் நடந்து வந்தவர்கள்...!!

Published on 18/04/2020 | Edited on 18/04/2020

கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பொதுமக்களை காத்துக்கொள்வதற்காக மத்திய, மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மே 3  வரை அமலில் உள்ள நிலையில், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது. 

  walk


இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர், கர்நாடக மாநிலம், மாண்டியாவில் தங்கிக்கொண்டு அங்கேய வேலைசெய்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென போடப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு ஏப் 14 ல், முடியும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர். மேலும் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து 18 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் தவித்துபோன, இந்த 12 பேரும் எப்படியாவது நமது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என முடிவு எடுத்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் இருந்து தமிழ்நாடு மாநிலம் தட்டக்கரை வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்துள்ளனர். 
 

nakkheeran app



இப்படி வந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம், தட்டக்கரை செக்போஸ்ட்டில் பாதுகாப்பில் இருந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் பிடித்து விசாரிக்கையில் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் எனவும், இந்த ஊரடங்கு உத்தரவில் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு போக வேண்டும், அதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததாகவும் தொரிவித்தனர். அதனை அடுத்து அவர்கள் 12 பேரும் தட்டக்கரையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று சம்பவ இடத்திற்கு வந்த சுகதாரத்துறையினர் அவர்கள் அனைவரையும் பரிசோதித்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று எதுவும் இல்லை என்பதை ஊறுதிபடுத்தினர். இந்த சம்பவம் மீண்டும் கலெக்டர் கதிரவன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உத்தரவின் பேரில், நேற்று இரவு தட்டக்கரையில் இருந்து பாதுகாப்பாக, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

“எனது இறுதிச்சடங்கிற்காவது வாருங்கள்” - கார்கே பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Karke emotional speech at karnataka for lok sabha election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதில் கர்நாடகா மாநிலம், கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார்.

அதன்படி, காங்கிரஸ் சார்பில் அப்சல்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ண தொட்டாமணியை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர், “மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்றால், கலபுர்கியில் தனக்கு இடமில்லை என்று அவர் கருதுவார். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எனக்கு இங்கு இடமில்லை, உங்கள் இதயத்தை என்னால் வெல்ல முடியாது என்று நினைப்பேன். 

காங்கிரஸுக்கு உங்கள் வாக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காவிட்டாலும், என்னுடைய நல்ல செயல்களை நினைவுகூர்ந்து என் இறுதிச் சடங்கிற்கு வாருங்கள். தகனம் செய்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும் அல்லது புதைக்கப்பட்டால் மண்ணை வழங்கவும். எனது இறுதி ஊர்வலத்தின் போது அதிகமான மக்கள் குவிந்தால் நான் சில நல்ல செயல்களைச் செய்துள்ளேன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். உங்கள் வாக்கு வீண் போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். 

கலபுர்கி மக்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கடந்த தேர்தலில் நான் தோல்வியை சந்தித்தேன். எம்.பி., அமைச்சராக இருந்து நான் செய்த வளர்ச்சிப் பணிகள் உங்களுக்குத் தெரியும். மீண்டும் காங்கிரஸ் கட்சி தோற்றால் உங்கள் இதயத்தில் எனக்கென்று இடமில்லை என்று கருதுகிறேன். நான் அரசியலுக்காக பிறந்தவன். நான் தேர்தலில் போட்டியிடுகிறேனோ, இல்லையோ, இந்த நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்” என்று கூறினார்.