Skip to main content

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை: 23 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Mandus Cyclone Warning: Holidays for schools and colleges in 17 districts

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. வேகமாக நகரும் இப்புயல் நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் பொழுது 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று 85 கிமீ வரை வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை (9/12/22) 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.

 

தற்போது நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகப்பட்டிணம், திருச்சி, திருப்பத்தூர், சிவகங்கை என 23 மாவட்டங்களிலும் அன்று (9/12/22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து புதுச்சேரி காரைக்காலிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Important announcement released by the Department of Education on 5 consecutive days off for schools

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, தமிழக அரசு, தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தல் பணிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Holidays for schools and colleges in 4 districts!

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதனை தொடர்ந்து, 4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வரும் டிச. 4ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.