மணப்பாறை பேருந்து விபத்து; தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

nn

அண்மையில் கடலூரில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு தனியார் பேருந்து மீது மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் மணப்பாறை அருகே இன்று மாலை அதேபோல் கொடூர விபத்து நிகழ்ந்தது.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து திருச்சி மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த கார் பேருந்து மீது மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையிலிருந்து தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இந்த கொடூர விபத்தில் முதல் கட்டமாக ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Manaparai bus accident; Tamil Nadu Chief Minister Relief Notification

இந்நிலையில் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த முத்தமிழ்செல்வன், நாகரத்தினம், ஐயப்பன், மணிகண்டன், தீனதயாளன் ஆகிய ஐந்து பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Manaparai thiruchy TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe