Skip to main content

கூடா நட்பு: மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றி கொல்ல முயன்ற வாலிபர் கைது

Published on 30/08/2018 | Edited on 30/08/2018
 arrested



வேறொரு பெண்ணுடன் கூடா நட்பு இருந்ததை மனைவி தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவி வாயில் எலி மருந்தை ஊற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

 

நாகை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் திருஞானசம்பந்தம் (வயது 32). இவருக்கு வினோதா (30) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருஞானசம்பந்தத்துக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. 
 

இந்த விஷயம் வினோதாவுக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக கணவர் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யாரும் திருஞானசம்பந்தத்தை கண்டிக்கவில்லை. மேலும் அந்த பெண்ணுடனான தொடர்பை திருஞானசம்பந்தம் நிறுத்தவில்லை. 
 

சம்பவத்தன்று வினோதா, திருஞானசம்பந்தத்திடம் கள்ளக்காதல் குறித்து கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருஞானசம்பந்தம் தனது கள்ளக்காதலியை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதனால் செய்வதறியாமல் வினோதா, எனக்கு யாரும் உதவமாட்டீங்களா, அவரை கண்டிக்க மாட்டீங்களா என்று கத்தியுள்ளார்.
 

 

 

இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த திருஞானசம்பந்தம் வினோதாவின் வாயில் எலி மருந்தை ஊற்றி கொலை செய்ய முயன்றார். அப்போது வினோதா சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் திருஞானசம்பந்தம் வீட்டுக்குள் நுழைந்து வினோதாவை காப்பாற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

 

 

நடந்த சம்பவம் குறித்தும், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்தும், மணல்மேடு காவல்நிலையத்தில் வினோதா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலுசார், திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் திருஞானசம்பந்தத்தை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.