Advertisment

வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபர் கைது

nn

நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்குத்தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நெல்லை ரயில் நிலையத்தின் பயணிகள் தங்கும் அறைகள், தண்டவாளங்கள், ரயில்வே பிளாட்பாரங்கள், லக்கேஜ் வைக்கும் இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மிரட்டல் காரணமாக நெல்லையின் பொது இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

Advertisment

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விசாரணையில் நெல்லை வண்ணாரப்பேட்டையைச்சேர்ந்த சிவபெருமாள் என்கின்ற 42 வயது நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe