Skip to main content

நீதிமன்றத்தையே ஏமாற்றி வேலைக்கு சேர்ந்து சம்பளம் வாங்கியவர் கைது!

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளி விவரத்தில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.1% அதிகரிப்பு என்கிற நிலையில் அரசாங்க வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தவறுதலாக கிடைத்த அரசு பணி நியமன ஆணையை வைத்து ஏமாற்றிய வேலைக்கு சேர்ந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. 



அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் குலமாணிக்கம் செம்பியான்குடி வடக்கு காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ராஜிவ்காந்தி. இவர் டிஎன்பிஎஸ்சி நடத்திய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணபித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். 

 

court



தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஆணையை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைத்தனர். வேலைக்கான ஆணையை போஸ்மாஸ்டர் சரியாக விசாரிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் வடக்கு தெருவில் வசிக்கு சப்பாணி மகன் ராஜீவ்காந்தியிடம் கொடுத்துள்ளார். 



அவரும் நான் அவரில்லை என்று தெரிவிக்காமல் வேலைக்கான ஆணையை பெற்றுள்ளார். இந்த ஆணையை வைத்து ஆள் மாறாட்டம் செய்து வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்று ராஜீவ்காந்தி முடிவு செய்து அனைத்து ஆவணங்களையும் கொண்டு கோர்ட் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். 



ராஜீவ்காந்தியின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த அதிகாரிகள் ராஜீவ்காந்தியை லால்குடி உரிமையில் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியமர்த்தினார்.



இதனையடுத்து லால்குடி நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணி சேர்ந்த ராஜீவ்காந்தி கடந்த 45 நாட்கள் பணிபுரிந்திருக்கிறார். 15 நாட்கள் வேலை செய்தற்கான சம்பளத்தை வாங்கியுள்ளார். 



டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற்றும் அதற்கான ஆணை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் உண்மையான ராஜீவ்காந்தி. உடனே அவர்கள் தரப்பில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை அனுப்பி விட்டோம். நீங்களும் வேலைக்கு சேர்ந்து சம்பளமும் வாங்கியிருப்பதாக நீதிபதி சொல்லியிருக்கிறார். 



நீதிபதி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்திக்கு மயக்கமே வந்துள்ளது. எனக்கு எந்த ஆணையும் வரவில்லை. நான் எங்கையும் வேலைக்கு சேரவில்லை என்று தன் தரப்பு நியாயத்தை சொல்லியிருக்கிறார். ராஜீவ்காந்தியின் பேச்சை கேட்ட நீதிபதி எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து விசாரணை நடத்த சொல்லி உத்தரவிட்டுயிருக்கிறார். 



விசாரணையில் சப்பாணியின் மகன் ராஜீவ்காந்தி ஆள்மாறாட்டம் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றி பணியில் அமர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு லால்குடி நீதிமன்றத்தின் தலைமை எழுத்தர் மெஸ்லினா மெரினா மோனிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலிசார் சப்பாணி மகன் ராஜீவ்காந்தியின் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.