Skip to main content

ஆசை 60 நாள்...! காதல் வலையில் வீழ்த்தி 'கணவன்' போர்வையில் சிறுமியை சீரழித்த வாலிபர் கைது!

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

man who cheated and married girl arrested pocso act

 

பாலக்கோடு அருகே பள்ளிச் சிறுமியை காதல் திருமணம் செய்து நாசம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது  செய்தனர்.    

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்த  மாணவியும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடந்த இரண்டு  மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி, ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோரை பார்க்க ஆசையாக இருப்பதாகக் கூறிய காதல் மனைவியை, விரைவில் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாகக்  கூறியுள்ளார் அவருடைய கணவர். அதன்படி, பிப். 1ம் தேதி தர்மபுரி பேருந்து நிலையத்தில் மனைவியுடன் வந்த வாலிபர் அவரைத் தனியாக  விட்டுவிட்டு திடீரென்று தலைமறைவாகி விட்டார்.  

 

நீண்ட நேரமாகியும் கணவர் வராததால் அவருடைய அலைபேசியை தொடர்பு கொண்டுள்ளார். அந்த வாலிபர் எடுத்துப் பேசவில்லை எனத் தெரிகிறது. தொடர்ச்சியாக அவருடைய எண்ணுக்கு முயன்றபோது ஒரு கட்டத்தில் அவர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டார். இதையடுத்துதான் அந்தச் சிறுமி, தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தார். கையறு நிலையில் தடுமாறிய மாணவி, வேறு வழியின்றி தனது பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் மகளை மீட்டு வீட்டுக்கு அழைத்துச்  சென்றனர். 

 

பெற்றோர் விசாரித்ததில், மகள் தற்போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பொரத்தூரைச் சேர்ந்த முத்து மகன் கவியரசன்(20) என்பவர் சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை தர்மபுரி சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.