Skip to main content

புதையல் ஆசையில் மகனை நரபலி கொடுக்க முயன்ற தந்தை...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

Image

 

நெல்லை அருகே போலி சாமியாரை நம்பி புதையல் ஆசையில் மகனையே கொல்ல முயன்றுள்ளர் தந்தை.

 

நெல்லை மாவட்டத்தின் களக்காடு அருகேயுள்ள கீழசடையமான் குளத்தின் குமரேசன், கூலி வேலை பார்ப்பவர். மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். தற்போது லாக்டவுண் காலம் என்பதால் வேலை வாய்ப்பில்லாத குமரேசன் எந்நேரமும் போதையிலிருப்பாராம். இவருக்கு அருகிலுள்ள டோனாவூரின் சாமியாரான கிரானராஜனுடன் பழக்கமேற்பட்டுள்ளது. குறிசொல்லி பிழைப்பை நடத்தும் கிரானராஜன் இல்லாததைச் சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் கறக்கும் வித்தையறிந்த போலிச்சாமியாராம்.

 

குமரேசனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போன கிரானராஜன், உனது வீட்டில் புதையல் உள்ளது. அதைப் பூதம் பாதுகாத்து வருகிறது. அதற்குப் பூஜை செய்து பலி கொடுத்து சாந்தமாக விரட்டினால் பூதம் போய்விடும். புதையல் கிடைக்கும். அதற்குச் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். ஆதலால், பூதத்தை விரட்டி புதையல் எடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும் என்று போலிச்சாமியார் சொன்னதைக் கேட்டு வாய்ப்பிளந்து போன குமரேசன் தன் தாய் பார்வதியின் ஒப்புதலோடு பணத்தைக் கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

 

குறிப்பிட்ட நாளான பௌர்னமிக்கு முதல் நாளான நேற்று முன்தினம் குமரேசனின் வீட்டில் பெரிய பள்ளம் தோண்டி பூஜைகள் செய்துவிட்டு ரத்தப்பலி கொடுப்பதற்காக ஒரு சேவலை அறுத்து ரத்தம் தெளித்தவர் பிறகு முக்கியப் பலியாகப் பூனையைப் பலி கொடுக்க முற்பட்ட போது அது தப்பியோடிவிட்டது. பூஜையை நிறுத்திய கிரானராஜன், பூனை ஓடிறுச்சி, அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை பலிதரணும். உன் குழந்தைகளில் தலைச்சன் பிள்ளையை நரபலி கொடுக்க வேண்டும். இல்லையேல் குரளி உன் குடும்பத்தின் மீது பாய்ந்துவிடும். அது உங்களுக்கு ஆபத்து என்று சொல்ல, போதையிலிருந்த குமரேசனும் பயத்தில் தலையசைத்து இருக்கிறார்.

 

இவர்களின் நரபலிப் பேச்சைக் கேட்டு அரண்டு போன மனைவி ராமலட்சுமி பதறிப் போய்த் தன் உறவினர் சொர்ணபாண்டியிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக அவர் களக்காடு போலீசில் புகார் செய்திருக்கிறார். தொடர்ந்து களக்காடு இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திப் போலிச் சாமியார் கிரானராஜன், குமரேசன், தாய் பார்வதி மூன்று பேரையும் கைது செய்திருக்கிறார்.

 

கிராமங்களில் என்னதான் விழிப்புணர்வு போதனைகள் நடந்தாலும், ஆடுகள் எப்போதுமே கசாப்புக் கடைக்காரனைத்தானே நம்புகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Case against Nayinar Nagendran High Court action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத,  தகவல்களை மறைத்த வேட்புமனுவை ஏற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ வாக்குப்பதிவைத் தவிர மற்ற தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில் தாமதமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிந்த பின் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை எதிர்த்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.