Skip to main content

வகுப்பறையில் ஏற்பட்ட தகராறு; சக மாணவனை கத்தரிக்கோலால் குத்திக் கிழித்த மாணவன்

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

man stabs fellow student with pair scissors

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள இளவனாசூர் கோட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் நேற்று இரு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் திருமலை(14), நம்பி குளம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் மணிகண்டன்(14)  இருவருக்கும் வகுப்பறையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ஜாமென்ட்ரி பாக்ஸில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து திருமலையின் வயிற்றில் குத்திக் கிழித்துள்ளார். இதில் திருமலை பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதைப் பார்த்த, அங்கிருந்த ஆசிரியர்கள் திருமலையை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இளவனாசூர் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராற்றில் சக மாணவன் மற்றொரு மாணவனை கத்தரிக்கோலால் குத்திக் கிழித்த சம்பவம் இளவனாசூர் கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி படிக்கும் மாணவர்கள் இடையே இவ்வளவு விரோத மனப்பான்மை எப்படி ஏற்பட்டது. இதுபோன்ற பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு அவ்வப்போது கவுன்சிலிங் கொடுக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதை இந்தப் பள்ளியில் நடத்தினார்களா, என்று கேள்வி எழுப்புகிறார்கள் அப்பகுதி கிராம மக்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.