Skip to main content

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

Perambalur

 

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்பனபாடி கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி வடலூரில் உள்ள ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரிக்கு படிப்பதற்குச் சென்றுவந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற 23 வயது இளைஞர் மாணவியைக் காதலிப்பதாகத் தெரிவித்து, இருவரும் நெருக்கமாகப் பழகி வந்தனர். மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த குமார், அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

 

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவியைக் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்துள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

                                                                                                                                 

புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர், குமாரை போக்சோ (POCSO) சட்டத்தில் கைது செய்தனர். அது சம்பந்தமான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மலர்விழி, நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

 

அதில் குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். 

 

18 வயதிற்குக் கீழுள்ள அத்தனைபேரும் சிறுவர்கள் (குழந்தைகள்) தான். அவர்களுக்குப் பாலியல் ரீதியாக, மன ரீதியாக அல்லது உடல் ரீதியாக துன்புறுத்தல் செய்வோரைத் தடுக்கவும் தண்டிக்கவும் உருவாக்கப்பட்டது தான் போக்சோ சட்டம். மக்களைப் பாதுகாக்க உருவாக்கப்படும் சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே பாலியல் குற்றங்கள் நடக்கும்போது மக்கள் நம்பிக்கையுடன் புகார் தெரிவிக்க முன்வருவார்கள்.

 

அவ்வகையில் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் துணிந்தவர்களுக்கு சரியான தண்டனைகள் கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் மகளிர் நல அமைப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.