Skip to main content

கள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
Kallakurichi

 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீஸ் துணையுடன் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் ஒரு குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சவேரியார் பாளையம் ஏரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் (36). இவருக்கு மனைவி மகள் மற்றும் மகன் உள்ளனர். நேற்று இவர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜேக்கப் அவர் கையில் 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேன் பறிமுதல் செய்தனர்.

 

பிறகு அவரிடம் விசாரித்தபோது, தனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்; அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி உள்ளார்.

 

மேலும் அவர் கூறும்போது, "கடந்த 2018 ஆம் ஆண்டு சவேரியார் பாளையம் பகுதியில் கிணற்று மேட்டுப் பகுதியில் வீடு கட்டும் பணிக்காக மண்ணை எடுத்தேன். அது தவறு எனக் கூறி அந்த ஊரை சேர்ந்த சிலர் என்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு 50,000 அபராதம் விதித்தனர், பிறகு அதை 15 ஆயிரம் ரூபாயாக குறைத்தனர். இதன் பிறகும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று விரட்டி விடுகிறார்கள். இதனால் என் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். என் வீட்டு மின் இணைப்பை துண்டித்துள்ளனர். அரசு ஒதுக்கீடு செய்த வீட்டை கூட கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர். என் குடும்பத்தினர் யாரும் ஊரில் நடமாடக்கூடாது என என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனர். இது குறித்து போலீசில் பல முறை புகார் குறித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியதோடு அதுசம்பந்தமான புகார் மனு ஒன்றையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.

 

ஒரு குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படும் சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவது ஏன் என்று கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.