Advertisment

பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி - போலீசார் வழக்குப்பதிவு!

man cheated money from woman

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் லலிதா. இவர் தனக்கு வேலை வாங்கி கொடுக்கும்படி திருச்சி கல்யாணசுந்தரம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரிடம் 4.60 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisment

பணம் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் வேலையை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் லலிதா கதிரேசனிடம் இது குறித்து கேட்ட போது அவருடைய மனைவி புஷ்பவள்ளி தகாத வார்த்தைகளால் திட்டி கை கால்களில் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

police woman trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe