ADVERTISEMENT
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த 45 வயதான கார்த்திகேயன் என்பவரை பிடித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
ADVERTISEMENT
விசாரணையில், தற்போது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தனக்கு ஓட்டுநர் பணி வழங்க வேண்டும் என கார்த்திகேயன் வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையை அணுகியதாகவும், அதிகாரிகள் பின்னர் வரும்படி திருப்பி அனுப்பியதால் வெளியே வந்து ஆத்திரத்தில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்ததாக கூறியுள்ளார். அவர் மீது பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Show comments