Skip to main content

தடையில்லா மின்சாரம் பெறத் தயாராகும் மாமல்லபுரம்!!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் அதிக வருவாய் தரக்கூடிய நகரம் மாமல்லபுரம் இங்கு மிதமான மழைக்கும், காற்றுக்கும் மின்சாரத்தை நிறுத்தி விடுவது வழக்கம். இது போன்ற மின் வெட்டால் இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளிடையே திருட்டு பயம் அதிகரித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மர்ம நபர்கள் திருடிய சம்பவங்களும் நடந்தது.

 

​​Mamallapuram ready to get uninterrupted power supply !!

 

சிலர் பாலியல் துன்புறுத்தலில் சிக்கியுள்ள உள்ளனர். இதை உள்நாட்டு, வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் பலர் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், போன்ற சமூகவலை தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடலோர பகுதி சுற்றுலா தளங்களை மேம்படுத்த பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது இதில் முதல் கட்டமாக மாமல்லபுத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட இங்குள்ள சாலை, வீதி, தெரு, என சுமார் 86கிலோ மீட்டர் தூரத்துக்கு தரைவழி மின்சார கேபில்கள் பதித்து மின்சார வயர் தெரியாமல் அழகான பசுமை  நகரமாக மாற்றி தடையில்லா மின்சாரம் வழங்க உள்ளனர்.

 

அதற்கான முதல்கட்ட பணிகளை மின் வாரியம் துவங்கி விட்டது. இந்த பணிக்காக விழுப்புரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 200 மீட்டர் நீளம் கொன்ட 100 க்கும் மேற்பட்ட கேபில் உருளைகள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிய 6 மாதம் ஆகும் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். பணி முடிந்து தரைவழி மின்சாரம் வழங்கப்பட்டதும் மாமல்லபுரம் சென்னை பெருநகர் போன்று காட்சியளிக்கும் என்பது குறிப்பிடதக்கது. மாமல்லபுரம் புறவழிச் சாலையில் தரையில் பதிப்பதற்காக தயாராக வைக்கப்பட்டுள்ள மின்வயர் கேபிள் உருளைகளை படத்தில் காணலாம். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரந்தூர் ஏர்போர்ட்; இரண்டாம் கட்டமாக வெளியான திடீர் அறிவிப்பு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Notice to acquire land for Parantur Airport

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது, அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வகுடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரசால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாக்கியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடாவூரில் நிலம் எடுப்பு அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

'மீண்டும் வேகமெடுக்கும் பரந்தூர் போராட்டம்'- போலீசார் குவிப்பால் பரபரப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
'Paranthoor struggle to pick up speed again'-Police build up excitement

காஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக் குழுவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னைக்கான இரண்டாவது பெரிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்ட அமைப்புகள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அலுவலகம் பொன்னேரிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டு நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலம் எடுக்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர்களில் படையெடுக்க ஆயத்தமான நிலையில், திடீரென சிலர் சாலையிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.