Skip to main content

இப்பதான் நிம்மதியாக இருக்கோம்... மாலத்தீவிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களின் சந்தோஷக் குரல்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

maldives tamil peoples kerala state in cochin district


"இப்பதாங்க நிம்மதியாக இருக்கோம். குடும்பத்தினரை, சொந்தம் பந்தங்களைப் பார்க்க முடியாமலேயே போயிடுவோம்னு நினைச்சோம். நல்லவேளையாக அரசு எங்களை இங்க கொண்டு வந்து விட்டு விட்டது" எனச் சொந்தங்களைக் காணும் சந்தோஷத்தில் கண்ணீர் மல்க பேசுகின்றனர் மாலத்தீவிலிருந்து கப்பற்படை கப்பல் மூலம் கொச்சினுக்கு வந்த தமிழர்கள்.

 

 

maldives tamil peoples kerala state in cochin district


கரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகப் பொதுப்போக்குவரத்து மற்றும் தனிப் போக்குவரத்திற்குத் தடைவிதித்து நாடெங்கும் ஊரடங்கினை அமல்படுத்தியது மத்திய, மாநில அரசுகள். இதனால் பணி நிமித்தம் காரணமாக வெளி நாடுகளில், வெளி மாநிலங்களில் வசித்தவர்கள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்பொழுது மே 17- ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியினை துவக்கியது இந்திய அரசு. "வந்தே பாரத் மிஷன்" எனத் தலைப்பிலிடப்பட்ட மீட்பு பயணத்தில் மே 13 வரை 64 அரசு விமானங்களும், கப்பற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்களும் ஈடுபடுமென அரசால் அறிவிக்கப்பட்டது. 
 

maldives tamil peoples kerala state in cochin district


இதன்படி இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்கும் முயற்சிகளை முடுக்கி, மீட்புப் பணி தொய்வில்லாமல் நடைப்பெற்று வருகின்றது. இதே வேளையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டு மாலத்தீவில் இருக்கும். இந்தியர்களை மீட்க இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல் அங்கு அனுப்பப்பட்ட நிலையில் 595 ஆண்கள், 103 பெண் பயணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் வெள்ளிக்கிழமையன்று கேரளாவிலுள்ள கொச்சினை நோக்கிப் புறப்பட்டது கப்பல். இதில் பயணம் செய்தவர்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 14 நபர்களும், 19 கர்ப்பிணிப் பெண்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

maldives tamil peoples kerala state in cochin district

 

மாலத்தீவிலிருந்து இந்தியா புறப்பட்டுப் பயணம் செய்த மொத்தமுள்ள 698 இந்தியர்களில் கேரளா மாநிலத்தினை சேர்ந்தவர்கள் 440 நபர்களும், தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் 187 நபர்கள், தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் 9 நபர்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தலா எட்டு நபர்கள், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா 7 நபர்கள், டெல்லியைச் சேர்ந்த நான்கு நபர்கள், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் கோவா மற்றும் அசாமில் இருந்து தலா ஒருவர் எனக் கப்பற்படை மற்றும் மருத்துவத்துறை தரப்பிலிருந்து கூறப்பபட்டது.
 

maldives tamil peoples kerala state in cochin district


ஞாயிற்றுக்கிழமையன்று கொச்சின் துறைமுகத்திற்கு வந்த கப்பல் பயணிகளை இறக்கி விட்ட நிலையில், அங்கேயே காய்ச்சல், சளி மற்றும் கரோனா தொடர்புடைய அறிகுறிகள் இருக்கின்றதா? என அனைவரிடமும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவப் பரிசோதனையின் முடிவில் கேரளாவினை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல 40 பேருந்துகளையும் 50- க்கும் அதிகமான 4 சக்கர வாகனங்களையும் இயக்கியது கேரள அரசு. தமிழகத்தினை சேர்ந்தவர்களை அழைத்து செல்ல 7 அரசுப் பேருந்துகளை இயக்கிய தமிழக அரசு களியாக்கவிளை பகுதியில் 50 நபர்கள், கொல்லங்கோடு பகுதியில் 30 நபர்கள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் 80 நபர்கள் மற்றும் மீதமுள்ளோர்களை கன்னியாகுமரி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகின்றது. 

 

maldives tamil peoples kerala state in cochin district


நாளைக்குள் மருத்துவப் பரிசோதனைகளின் முடிவின் பேரில் நோய்த் தொற்று இல்லாதவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், தொற்று உள்ளவர்கள் அந்தந்தப் பகுதிகளிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

http://onelink.to/nknapp


"லாக் டவுன் பிரச்சனையால் குடும்பம், குழந்தைகளை விட்டு மன நிம்மதியில்லாமல் இருந்தோம். இப்பதான் நிம்மதியாக இருக்கோம். கண்டிப்பாக இன்னும் ஓரிரு நாட்களில் எங்களுடைய குடும்பத்தாரைப் பார்த்துவிடுவோம்.. சந்தோஷமே.!" என்கின்றனர் மாலத்தீவிலிருந்து மீண்ட தமிழர்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.