Skip to main content

திருச்சியில் தினம் தினம் தவிக்கும் மலேசிய பயணிகள்! 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

 

கரோனோ வைரஸ் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் பெரிய பதட்டத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் கடந்த 17ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன.

 

இதனால் கடந்த 17ஆம் தேதி இரவு திருச்சியில் இருந்து ஏா் ஏசியா விமானத்தில் மலேசிய செல்ல முன்பதிவு செய்திருந்த 70 போ் மலேசியா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஏமாற்றம் அடைந்த மலேசிய பயணிகள் உடனடியாக தங்கள் நாடுகளுக்கு அனுப்ப வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

Trichy

 

தகவல் அறிந்த மலேசிய தூதரக அதிகாரிகள் திருச்சி வந்து போராட்டக்காரா்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மலேசிய அரசுக்குத் தகவல் கொடுத்தனா்.

 

இதனைத் தொடா்ந்து திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட மாநிலங்களில் சிக்கித்தவித்த 520 பேரும் திருச்சி விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனா்.

 

தவிக்கும் பயணிகளில் வயது முதியவர்கள், கா்ப்பிணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு பெரிய பட்டியலைத் தயார் செய்தனர் அதில் முதல்கட்டமாக 186 பேரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்து வந்தது.

 

Trichy

 

 


 

 

அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அன்று மலேசியாவில் இருந்து தனி விமானம் திருச்சி வந்தது. அந்த தனி விமானத்தில் திருச்சியிலிருந்து செல்லவிருந்த 186 மலேசிய பயணிகளுக்கு பல்வேறு கட்ட சோதனைகள் முடிவுற்று ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டு சென்றனா்.

 

 

மீதமுள்ள அனைவரும் விரைவில் மலேசியா அழைத்துச் செல்லப்படுவார்கள் என மலேசியத் துணைத் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்தனா். இதனால் கடந்த 5 நாட்களாக மலேசியா விமானிகள் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வருகிறார்கள். அதற்கான உணவு, தங்கும் இடம் தேடி வருகிறார்கள்.

 

Trichy

இந்தத் தகவலை கேள்விப்பட்ட திருச்சியைச் சுற்றி உள்ள மலேசியா செல்வதற்கு தவிக்கும் பயணிகள் தினமும் திருச்சி விமானநிலையம் வந்து அடுத்து மலேசியாவிற்கு எப்போது விமானம் வரும் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

 

திருச்சி விமானநிலைய அதிகாரிகளோ ஏற்கனவே கணக்கு எடுக்கப்பட்ட மலேசிய விமானிகள் மட்டுமே அழைப்பு கொடுக்கப்படும். அவர்களை முதலில் அனுப்புவதற்கு மட்டுமே தற்போதைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்கிறார்கள். 

 

இதனால் மலேசியா எப்படியாவது சென்று விடமாட்டோமா என்கிற தவிப்பில் தினமும் திருச்சி விமானநிலையம் வந்து செல்கிறார்கள் மலேசிய பயணிகள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.