Skip to main content

இரட்டை கொலை வழக்கிலிருந்து பெயரை நீக்க மலேசியா டிரிப், ராயல் என்பீல்டு... கசிந்த உளவுத்துறை குறிப்பு..!!!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

 

 

police




"எஸ்பி சென்றதால் கிடா விருந்து வைத்தாரா தனிப்பிரிவு காவலர்?" என தலைப்பிலிட்டு முகவரியின்றி மொட்டையாக வெளியான "வாட்ஸ் அப்" பதிவு ராமநாதபுர மாவட்டக் காவல்துறையையே கலங்கடித்துள்ளது என்றால் அது மிகையல்ல..!!

 

   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணியில் இருக்கும் முரளி என்பவர் (த .கா:1300) 2016-ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் நகர், பஜார் காவல் நிலையங்களில் பணிபுரிந்து தற்சயம் கேணிக்கரை காவல் நிலையத்தில் அயல்பணியாக தனிப்பிரிவு காவலராக இருந்து வருகிறார். இவரைக் குறிவைத்து, "எஸ்பி சென்றதால் கிடாவிருந்து வைத்தாரா தனிபிரிவு காவலர்? எனத் தலைப்பிலிட்டு, ராமநாதபுரத்தில் போதை பொருளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த எஸ்பி வருன்குமார் தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார்.



 

   இந்நிலையில் கேணிக்கரை காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக உள்ள முரளி என்பவர் கடந்த வாரம் அழகங்குளம் தோப்பில் கிடாய் வெட்டி விருந்து கொடுத்துள்ளார். இதில் கேனிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரபு கலந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் அனைவரும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களின் முக்கியஸ்தர்கள். அதுமட்டும் இல்லாமல் டிஐஜி அலுவலகம் அருகே நடந்த இரட்டை கொலை தொடர்பாக சாத்தான்குளத்தை சேர்ந்த பிரபல தொழலதிபர் ஒருவர் சம்மந்தப்பட்ட இரட்டை கொலை வழக்கில் இருந்து தனது பெயரை எடுப்பதற்காக புல்லட் பைக் வாங்கி கொடுத்துள்ளார். இவர் மூலமாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு காவலர் மலேசியா நாட்டிற்கு சென்றார். இந்நிலையில் தற்போது உளவுப்பிரிவு செல்ல இருப்பதால் 7 கிடாய் வாங்கி வைத்துள்ளார் அடுத்தகட்ட விருந்திற்காக. பயிற்சி முடித்து எஸ்பி வருவதற்குள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார் என்று காவல்துறை சார்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்." என வாட்ஸ் அப் பதிவு மாவட்டம் முழுமைக்கும் சுற்ற, இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மையறிய தனக்கு நெருக்கமான உளவுப்பிரிவு அதிகாரிகளையே களமிறக்கினார் பயிற்சிலிருக்கும் எஸ்.பி. வருண்குமார்.

 

  வருகின்ற 29ம் தேதி பயிற்சி முடிந்து பணிக்கு திரும்பும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்காக காத்திருக்கின்றது  உளவுப்பிரிவு குறிப்போ, "எஸ்பி சென்றதால் கிடா விருந்து வைத்தாரா தனிப் பிரிவு காவலர்?" என்று முகவரி இன்றி "வாட்சப்" பதிவில் வந்த விபரத்தின் அடிப்படையில் தனிப்பிரிவின் மூலம் ரகசிய விசாரணை செய்ததில், " கடந்த 09.02.2020 அன்று தனது இளையமகள் பிறந்தநாளை முன்னிட்டு தனக்கு பழக்கமான இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் எதிரே உள்ள தாஜ் போட்டோ ஸ்டூடியோவின் உரிமையாளருக்கு சொந்தமான அழகன்குளம் கடற்கரை அருகே உள்ள தென்னந்தோப்பில் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியும்,மதிய அசைவ உணவு விருந்தும் கொடுத்துள்ளார். இந்த விருந்தில் கேணிக்கரை ஆய்வாளர் பிரபு, சார்பு ஆய்வாளர் முருகநாதன் மற்றும் தனது உறவினர்கள் உட்பட பழக்கமான நண்பர்களும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

 

   16.10.2018ம் தேதி ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் அவர்களது முகாம் அலுவலகம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கார்த்திக் த/பெ சூரப்புலி (எ) சுப்பிரமணியன் வாலாந்தரவை என்பவரும் அவரது நண்பர் விக்னேஷ் பிரபு த/பெ தவமணி, கருவேப்பிலைக் காரத்தெரு என்பவரும் கொலை செய்யப்பட்டதில் கேணிக்கரை Cr: No : 289/18 u/s 120B,147,148,149,302 and 5 of Explosive substance Act,,, வழக்கின் இரண்டாவது எதிரியான சாத்தான்குளம் தொழில் அதிபர் ஆவார். இவருக்கு இந்தியா மற்றும் மலேசிய நாடுகளில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், சூப்பர் மார்க்கெட் போன்றவை உள்ளன. இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளின் புலன் விசாரணையில்,  மேற்படி சாத்தான்குளம் தொழில் அதிபருக்கு தொடர்பு இல்லை என்ற நிலையில் இவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த காலகட்டத்தில் தனிப்பிரிவு காவலர் முரளி கிருஷ்ணன் புதியதாக ஒரு புல்லட் பைக் வாங்கியுள்ளார். மேலும் 2019 ம் ஆண்டு  தனது உறவுக்காரரின் திருமண நிகழ்ச்சி மலேசியாவில் நடந்ததாக காவல்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று தனது மனைவியுடன் மலேசியா சென்று 15 நாட்கள் இருந்து வந்ததாகவும் அதற்கான ஏற்பாட்டை மேற்படி கொலை வழக்கின் முதலாவது எதிரியும், இரண்டாவது எதிரியாக இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட சாத்தான்குளம் தொழில் அதிபரும் செய்து கொடுத்ததாக தெரிய வருகிறது. தனிப்பிரிவு காவலர் முரளிகிருஷ்ணன் "SBCID எனும் உளவுத்துறைக்கு சென்றவுடன் 7 கிடா" வெட்ட உள்ளது பற்றி ரகசிய விசாரணை செய்ததில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவிற்கு குலதெய்வத்திற்கு குடும்பத்துடன் நேர்த்தி கடன் செலுத்துவற்கு "ஆட்டு கிடா" வாங்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது." என்றுள்ளதாக தகவல் கசிகின்றது.

 

  எஸ்.பி.வருண்குமாரின் நடவடிக்கை என்னவாக இருக்கும்..? என்பதே காவல்துறை ஆளிநர்களின் பந்தயக் கேள்வி..?


 

சார்ந்த செய்திகள்

Next Story

எண்ணூரில் கடையடைப்பு போராட்டம்!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Lockdown struggle in Ennoor

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

அதே சமயம் இது தொடர்பான வழக்கு இன்று (06.02.2024) பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி 42 வது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 33 மீனவ கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கடையடைப்பு போராட்டமானது இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Next Story

தீபாவளி போனஸில் திக்குமுக்காடிய ஊழியர்கள்!

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

The owner made the employees happy with a Diwali Gift

 

தீபாவளி பண்டிகையின் போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை போனசாக வழங்குவது வழக்கம். இதில் சில தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்குப் பொருட்களாகவும் தங்களது தீபாவளி போனஸை வழங்குவது வாடிக்கை. அந்த வகையில், கோத்தகிரியில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட் உரிமையாளர், தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த மோட்டார் சைக்கிளை தீபாவளி பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். 

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், அந்தப் பகுதியில் தேயிலை எஸ்டேட், கொய்மலர் சாகுபடி, மலை காய்கறி எனப் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். இவரது நிறுவனங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிவக்குமார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையின் போது தனது ஊழியர்களுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

 

இந்த நிலையில், இந்த வருடம் வருகிற நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையின் போது விலை உயர்ந்த பரிசைக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணிய சிவக்குமார், தனது நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் 15 ஊழியர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். பின்பு, அவர்கள் விரும்பும் வாகனங்களை அவர்கள் மூலமாகவே தெரிந்து கொண்ட போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மோட்டார் சைக்கிள்களைக் குறிப்பிட்டனர். அதனைக் கேட்டுக்கொண்ட சிவக்குமார் அவர்கள் விரும்பும் வாகனங்களை முன்பதிவு செய்து தனது நிறுவனத்திற்கு வரவழைத்துள்ளார். 

 

அதன் பின்னர் அவர், அந்த 15 ஊழியர்களையும் வரவழைத்து, தீபாவளி பரிசாக மோட்டார் சைக்கிள்களின் சாவிகளை அவர்களிடம் கொடுத்து இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அத்துடன், அந்த 15 ஊழியர்களுடன் தானும் ஒரு வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார். இது தவிர மற்ற ஊழியர்களுக்கு ஸ்மார்ட் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களையும், போனஸ் தொகையும் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.