மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இன்று (03.05.2023) இராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தைத் தொடங்கி வைத்த மேயர்
Advertisment