தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம்,கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள்அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்குவந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கானதொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைதீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் மார்ச்1 முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என மக்கள் நீதி மய்யம்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நடைபெறும்நேர்காணலைசுரேஷ் அய்யர், பொன்ராஜ், ரங்கராஜன்,செந்தில்ஆறுமுகம்ஆகியோர் நடத்தஉள்ளனர். அதேபோல்மக்கள் நீதி மய்யத்தின்முதற்கட்டவேட்பாளர் பட்டியல் மார்ச்7 -ஆம் தேதி வெளியாகும்எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.