வேட்பாளர்களுக்கு விருந்து... விழாவை முன்னெடுத்த மக்கள் நீதி மய்யம்!

இன்று (10/4/2022) மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் விருப்பப்படி, கடந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில், சென்னை மாநகராட்சிக்காக, கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் அழைத்துப் பாராட்டப்பட்டனர்.

இவ்விழா கட்சியின் மாநில துணைத்தலைவர் A. G. மௌரியா தலைமையில் நடைபெற்றது. மேலும் மாநிலச் செயலாளர்கள் முரளி அப்பாஸ், கிருபாகரன், வினோத், சஜீஸ், பிரகாஸினி, சினேகா மோகன் தாஸ் மற்றும் மாநகர மாவட்டச் செயலாளர்கள், அமைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். வேட்பாளர்களிடம் அவர்கள் போட்டியிட்ட பகுதியில் கிடைத்த அனுபவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விழா முடிவில் வேட்பாளர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. தொடர்ந்து இதேபோன்று தமிழகத்தின் மற்ற பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் பாராட்டுவிழா மாநிலம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

kamalhaasan Makkal needhi maiam
இதையும் படியுங்கள்
Subscribe