Skip to main content

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்களைக்  கண்டித்து 12 இடங்களில் பாமக போராட்டம்! 

Published on 22/03/2018 | Edited on 22/03/2018
ramadas

 

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்களை தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், விற்பனைக் கூடங்களில் எடைபோடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொறுத்த வேண்டும்;  எடை போடுவதையும், விலை நிர்ணயிக்கப்படுவதையும் கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் உழவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 12 இடங்களில் 6 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  ’’தமிழகத்தில் அனைத்து வழிகளிலும் உறிஞ்சப்படும் ஒரே பிரிவினர் உழவர்கள் தான். ஒருபுறம் அரசு மறுபுறம் சந்தை அமைப்புகள் என உழவர்கள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். குறிப்பாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உழவர்கள் மீது அங்குள்ள அதிகாரிகளால் நடத்தப்படும் சுரண்டல்கள் எல்லையில்லாதவை. அவற்றைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

 

நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 2016&ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 6351 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தேசிய அளவில் அதிக எண்ணிக்கையில் உழவர்கள் தற்கொலை செய்து கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 381 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருக்கும் போதிலும், அவற்றில் மிக முக்கியமானது உழவர்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது ஆகும். இது ஒருபுறமிருக்க குறைந்த விலைக்கு விளைபொருட்களை விற்பனை செய்யும் உழவர்களிடம் செய்யப்படும் ஊழல் கொடுமையானது. 

 

உழவர்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு பணிக்கும் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் வழக்கம் நீடிக்கிறது. உதாரணமாக எந்த ஒரு பொருளையும் எடை போட்டுத் தருவதற்காக  மூட்டைக்கு ரூ.20 வழங்க வேண்டும்; ரசீது போட்டுத்தர ரூ.50 வழங்க வேண்டும் என்று அங்குள்ள அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பணம் தர மறுக்கும் உழவர்களை அங்குள்ளவர்கள்  தரக்குறைவாக பேசுவதுடன், மூட்டைக்கு 2 அல்லது 3 கிலோ எடையை குறைத்து பதிவிடுகின்றனர்.

 

அதுமட்டுமின்றி, உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய பணத்தை  கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் உழவர்கள் சில நேரங்களில் நாள் கணக்கில் கூட வெட்ட வெளியில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. உழவர்களின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இதுதான் உதாரணமாகும்.

 

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் ஊழல்களை மதிப்பிட்டால் அது மலைக்க வைக்கும்  தொகையாக இருக்கும். இதனால் ஏற்படும் அத்தனை இழப்புகளும் உழவர்களுக்குத் தான்.  உடனடியாக இந்த ஊழல்களை தடுக்கவும், ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் அமைப்புகளும் பலமுறை வலியுறுத்தியும் ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக தற்போதைய வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இதற்கு முன் மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவராக இருந்தவர் என்பதால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் அனைத்து அத்துமீறல்களையும் அறிந்தவர். ஆனாலும், அவர் உழவர்களுக்கு துணை நிற்காமல் ஊழல் & முறைகேடுகளுக்கு துணை நிற்கிறார்.

 

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்களை தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், விற்பனைக் கூடங்களில் எடைபோடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொறுத்த வேண்டும்;  எடை போடுவதையும், விலை நிர்ணயிக்கப்படுவதையும் கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் உழவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 12 இடங்களில் 6 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

1)    27.3.2018     காலை 10.00 மணி- திருக்கோவிலூர்,         மாலை 3.00 மணி- விழுப்புரம். 
2)    28.3.2018     காலை 10.00 மணி- கள்ளக்குறிச்சி,         மாலை 3.00 மணி -உளுந்தூர்பேட்டை
3)    2.4.2018              காலை 10.00 மணி- வந்தவாசி,                      மாலை 3.00 மணி- சேத்பட். 
4)    3.4.2018     காலை 10.00 மணி- திருவண்ணாமலை,                    மாலை 3.00 மணி- போளூர். 
5)    4.4.2018      காலை 10.00 மணி- விருத்தாசலம்,         மாலை 3.00 மணி- சிதம்பரம். 
6)    5.4.2018       காலை 10.00 மணி- கடலூர்,             மாலை 3.00 மணி- பண்ருட்டி.

 

அனைத்து இடங்களிலும் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தலைவர் கோ.ஆலயமணி, செயலாளர் இல.வேலுசாமி ஆகியோர் தலைமை வகிப்பார்கள். உழவர் பேரியக்கத்தின்  மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பிற உழவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்பார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'விக்ரம்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

kamalhaasan 'vikram' movie making video released

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட சில நாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 

 

இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவை கமல் ரசிகர்கள் உள்பட 'விக்ரம்' பட ரசிகர்களும் தங்களது சமூக வலைதளபக்கத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக  'விஸ்வாசம்' இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது 'விக்ரம்' படம் 'விஸ்வாசம்' படத்தின் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  

 

 


 

Next Story

முககவசம் தயாரிக்கும் பணியில் காவலர்கள் (படங்கள்)

Published on 02/04/2020 | Edited on 02/04/2020


 

மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா வைரசால் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
 

பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வீதம் குறிப்பிட்ட நேரத்தில் முக கவசம் அணிந்து வெளியில் சென்று வருகின்றனர். இதனால் முக கவசத்தின் தேவை அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப்பணியாளுக்கு முககவசம் பற்றாக்குறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 

தேவை அதிகரித்துள்ள நிலையில், சென்னை எழும்பூர் காவல் ஆயுதப்படை வளாகத்தில் முககவசம் தயாரிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.