Advertisment

15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கர்நாடகாவில் 15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

எம்.எல்.ஏக்கள் என்ன முடிவெடுக்கின்றனரோ அதுவே இறுதி முடிவு. கர்நாடகாவில் 15 நாளில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை. 15 நாளில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும். குதிரை பேரம் நடக்காது. தனிக்கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்காமல் வேறு யாரை அழைப்பார்கள்?

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

பாஜக ஆட்சி அமைத்த மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், எடியூரப்பா பதவி ஏற்ற பின்னர், விவசாய கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலையை போன்றது. முள்ளில் சேலையை போட்டது திமுக. அது சுக்குநூறாக வேண்டும் என்பதே அக்கட்சியின் எண்ணம்.

ஒரு மாதத்திற்கு பின்னர், எடியூரப்பாவை சந்தித்து காவிரி மற்றும் தமிழகத்தின் பிரச்னை குறித்து பேசுவேன். காவிரியில் நிச்சயம் தண்ணீர் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

karnataka election Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe