Main accused in Thiruvannamalai ATM robbery arrested Haryana

Advertisment

தமிழகத்தையே உலுக்கிய ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ஹரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்குஏடிஎம்களில்70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 5 எஸ்.பிக்கள்தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடக, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில்கொள்ளையில்ஈடுபட்டஆரிவ், ஆசாத் என்பவர்களைஹரியானாவில்வைத்து தமிழகபோலீஸ்கைது செய்தது. பின்னர் அனைவரும் விமானத்தின் மூலம்ஹரியானாவில்இருந்து திருவண்ணாமலை அழைத்து வந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில்ஈடுபட்டமுக்கிய குற்றவாளியான ஆசிப், ஹரியானாமாநிலம் ஆரவல்லி கிராமத்தில் பதுங்கியிருந்தவரை தமிழகபோலீசார்துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்துள்ளனர். தற்போது அவரை திருவண்ணாமலை அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த வழக்கில் 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் ரொக்கம், 3 கார்கள், ஒருகண்டெய்னர்லாரிஉள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் முக்கிய குற்றவாளியான ஆசிப்பை கைது செய்த திருவண்ணாமலை போலீசாருக்குடிஐஜிசைலேந்திரபாபுரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளார்.