சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை மக்கள் சிவில் உரிமை கழகம் அறிவித்திருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தற்போது தமிழகம் முழுக்க உள்ள மக்கள் ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வருகிறார்கள். அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும் ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என எழுதியுள்ளார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டைகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பினார்கள்.