Skip to main content

குப்பைக்குள் மகாத்மா காந்தியின் அஸ்திக்கல்... நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம்!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

துர்நாற்றத்துடன், குப்பை கூளங்களில் சிக்கி தவிக்கின்றது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அஸ்திக்கல்.! "நாற்றத்தோடு இருந்தாலென்ன..! பார்க்கலாம்.!" என இன்று வரை இதனை சரி செய்ய முன்வரவில்லை தமிழக அரசு என குற்றஞ்சாட்டுகின்றனர் சர்வோதய சங்கத்தினர்.

1948- ஆம் ஆண்டு ஜனவரி 30- ஆம் தேதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி இந்தியாவெங்கும் நிறுவப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டது. 
 

Mahatma Gandhi's ashes in trash did not action district collector office

இங்கு காந்தியின் அஸ்தி வந்த கதை சுவாரசியமானது. சங்கரன்கோவில் அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லூரில் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் நிட்சேப நதி கரைபுரண்டோடிய காலம் உண்டு. காசிக்கு நிகரான இவ்விடத்தில் காந்தியின் அஸ்தி வைத்தால் மிகவும் நன்று எனக் கருதிய காங்கிரஸ் தொண்டர்கள் கரிவலம் வந்த நல்லூரில் காந்தியின் அஸ்தி வரவேண்டுமென கடிதம் எழுதி காத்திருக்க, தமிழ்நாட்டிற்கு காந்தியின் அஸ்தி கொண்டு வரப்பட்டது. 


ரயிலில் கொண்டு வரப்பெற்ற அஸ்தியினை யானை மீது வைத்து ஊர்வலம் நடத்தி, திருமுறை பாடி 1948- ஆம் ஆண்டு பிப்ரவரி 12- ஆம் தேதி அஸ்தியினை அங்குள்ள நிட்சேப நதியில் கரைத்தனர். இடையினில் 4-4-1957ம் ஆண்டு அங்கு வந்த வினோபா அடிகள் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தினில் நினைவுக்கல் நட, தற்பொழுது வரை அவ்விடத்தினை மகாத்மா காந்தியாகவே வழிப்பட்டு வருகின்றனர் சர்வோதயா சங்கத்தினர். 

Mahatma Gandhi's ashes in trash did not action district collector office

இது இப்படியிருக்க, ஊரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கு தான் குவிக்கப்பட்டு வருவதால் குப்பை கூளங்களின் நடுவில் துர்நாற்றத்தில் சிக்கியுள்ளது மகாத்மா காந்தி அஸ்திக்கல். இதனை பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை." என குற்றஞ்சாட்டுகின்றனர் சர்வோதய சங்கத்தினர். இருப்பினும், அரசு கைக்கொடுக்காவிடில் தாங்களே அவ்விடத்தை சுத்தம் செய்து வழிப்பாட்டிற்கு உகந்த நிலையில் மாற்றவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர் அவர்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

மயிலாடுதுறையில் சிறுத்தை; அம்பாசமுத்திரத்தில் கரடி; வைரலாகும் வீடியோ காட்சிகள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்கும் பணியானது ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த கரடி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, நபர் ஒருவரை கரடி துரத்துவதும், அந்த நபர் தலைதெறிக்க ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு மலை ஓரத்தில் உள்ள கிராமங்களில் விலங்குகள் தஞ்சம் புகுவது வாடிக்கையாகி வருகிறது.

Leopard in Mayiladuthurai; Bear in Ambasamudra; Videos go viral

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லிடைக்குறிச்சி பகுதிக்கு கரடி ஒன்று வந்துள்ளது. அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்த ஒருவர், கரடியைப் பார்த்தவுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த கரடியைத் தேடி வருகின்றனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது.