Advertisment

"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும்....."- தமிழக முதலமைச்சர் ட்வீட்!

mahatma death anniversary tamilnadu chief minister mkstalin tweets

Advertisment

மகாத்மா காந்தியின் 75- வது நினைவு நாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் இன்று (30/01/2022) சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe