Skip to main content

தர்ப்பணத்திற்கு தடை; வெறிச்சோடிய நீர்நிலையங்கள்... வாழ்வாதாரம் பறிபோன பட்டர்கள்

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

mahalaya amavasya thirunelveli

 

 

இறந்த முன்னோர்களுக்கு சர்வ அமாவாசை தினத்தில் நீர் நிலைகள், ஆற்று பகுதிகளில் தர்ப்பணம் செய்வது அல்லது திதி கொடுப்பது இந்து மற்றும் ஆன்மீக மக்களின் நம்பிக்கை. 

 

மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும் குறிப்பாக ஆடி, தை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, ஆகிய மூன்று அமாவாசைகளில் மட்டுமே மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து நீராடுவது மரபு.

 

அன்றைய தினம் தென் மாவட்டத்தின் குற்றால அருவிக்கரைகள், தாமிரபரணியின் பாபநாசம், முறப்பநாடு, நெல்லையின் குறுக்குத்துறை போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வதற்காக மக்கள் கூட்டமாகத் திரளுவதுண்டு. ஆனால் தற்போதைய கரோனா தொற்று பரவல் காரணமாக நெல்லை மாவட்ட கலெக்டரான ஷில்பா, அருவிக்கரைகள் நீர் நிலைகளில் மக்கள் கூட்டத்தை தடுக்கும் வகையில் தர்ப்பணத்திற்காக 5 நாட்கள் தடை விதித்திருக்கிறார். இதன் காரணமாக குற்றால அருவிக்கரைகள், முறப்பநாடு பாபநாசம் குருக்குத்துறை ஆற்றங்கரைகள் போலீஸின் பாதுகாப்பிருப்பதால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

 

இதுகுறித்து பாபநாசம் பகுதியின் பிராமநாயக குருக்கள் சொல்லும்போது, “அமாவாசை தர்ப்பண நாட்களில் மக்கள் பிதுர்க்களுக்கான திதி கொடுப்பதற்கு முக்கிய ஆற்றங்கரையான இந்தப் பாபநாசம் ஆலயம் வருவார்கள். அவர்களுக்கான வேத பாராயணம் மந்திரங்கள் மூலம் தர்ப்பணம் செய்வதால் கிடைக்கும் வருமானமே எங்களைப் போன்ற நூற்றுக்கணக்கான குருக்கள்களின் வாழ்வாதாரம். கரோனா காலம் என்பதால் முக்கியமான கடந்த ஆடி அமாவாசையும் தடையானது. நம்பிய மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் கூடாது என தடை விதிக்கப்பட்டது. அம்பை டி.எஸ்.பி.யான பிரான்சிஸ் எங்களை அழைத்து கூட்டத்தை கூட்டி தடை பற்றி தெரிவித்ததை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

 

இன்றைய தினத்தில் மற்ற தை, ஆடி மாத அமாவாசையைக் காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். ஆலய வருமானம், எங்களைப் போன்ற நேரடிக் குருக்கள்கள் மறைமுக வியாபாரம் கொண்டவர்களின் சுமார் ஒரு கோடி அளவிலான வருமானம் போய்விட்டது. இதில் கவனிக்க வேண்டியது அமாவாசை தினங்களையே நம்பியுள்ள எங்களின் 350 குருக்கள் குடும்பங்களின் ஜீவாதாரம் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியாக நிற்கிறோமே. இன்றைய இந்த வருமானம் தான் வரும் தை மாதம் வரை எங்களின் ஜீவாதாரத்திற்கு தாக்குப் பிடிக்கும். அது போய்விட்டது. வரும் தை மாதம் எந்த நிலைக்குத் தள்ளப்படுமோ. ஆறுமாதகாலமாக அந்தரத்திலிருக்கிறது எங்களின் வாழ்வாதாரம்” என்கிறார் உடைந்த குரலில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.