Skip to main content

முகநூல் காதல்; 8 பேரை திருமணம் செய்த இளம்பெண் 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

mahalaxmi eight youngster marriage police case incident 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). விவசாயியான இவர் முகநூல் (facebook) பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். மேலும் இதன் மூலம் பல்வேறு நபர்களை நண்பர்களாகச் சேர்த்து தகவல்களை பரிமாறிக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

 

இந்நிலையில்,  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் முகநூல் மூலம் அருள்ராஜிடம் நண்பராக சேர்ந்துள்ளார். மகாலட்சுமி 'தான் அனாதை என்றும், தனக்கு பெற்றோர் இல்லை என்றும், தன்னை உண்மையாக நேசிக்கும் நண்பர் தேவை' என்றும் இரக்கம் ஏற்படும்படி கூறி அருள்ராஜிடம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அருள்ராஜை காதலிப்பதாகக் கூறியுள்ளார். மகாலட்சுமியின் ஆசை வார்த்தைகளை நம்பி அருள்ராஜ் அவரை உண்மையாக காதலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பெற்றோரிடம் பேசி திருமணம் செய்ய அனுமதி வாங்கிய அருள்ராஜ் கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அன்று திருவதிகையில் உள்ள கோயிலில் மகாலட்சுமியை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணம் முடிந்து 4 மாதத்திற்குப் பிறகு, 'சென்னையில் தனது தோழிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு மகாலட்சுமி சென்றுள்ளார். மறுநாள் காலையில் அருள்ராஜ் பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூபாய் 85 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றைக் காணவில்லை.  செல்போன் மூலம் மகாலட்சுமியை பலமுறை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அருள்ராஜ் மனைவி கொடுத்த முகவரிக்கு சென்று விசாரித்த போது அதுபோன்று இங்கு யாரும் இல்லை எனக் கூறியுள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் அருள்ராஜ்.

 

இந்த சூழ்நிலையில் தொலைக்காட்சியில் பல்வேறு நபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம், நகை திருடிய மகாலட்சுமி குறித்து செய்தி வெளியானதை கண்ட அருள்ராஜ்., தன்னை போல் இதுவரை 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார், மோசடி செய்த மகாலட்சுமி என்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்தப் பெண்ணின் முழு நேர வேலையே பேஸ்புக் மூலம் கல்யாணம் ஆகாத ஆண்களிடம் பழகி அவர்களை காதலிக்கிறேன் என முதலில் ஆசை வார்த்தை கூறி, அவர்களை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி அவர்களை திருமணம் செய்து கொள்வார். அதன்பிறகுதான் அவரின் சுயரூபம் தெரியவரும். திருமணமான முதல் நாளில் தனது கணவர்களிடம் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நகை, பணம் உள்ளிட்டவற்றை அபேஸ் செய்து கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

mahalaxmi eight youngster marriage police case incident 

இதேபோன்று மகாலட்சுமி கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆண்களிடம் கைவரிசையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மகாலட்சுமி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரையும் தனது பாணியில் திருமணம் செய்து நகை பணத்தை அபேஸ் செய்து சென்றது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மகாலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரிக்கும் பட்சத்தில் எத்தனை ஆண்கள் மகாலட்சுமியிடம் ஏமாந்து இருக்கிறார்கள் என்பது தெரியவரும். மேலும் இந்த சம்பவத்தில் மகாலட்சுமி மட்டும் ஈடுபட்டுள்ளாரா அல்லது இவர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.