Skip to main content

16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! -600க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் கைது!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020
dddd

 


மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்ற உறவினர் 10 வயதில் அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார். 13 வயதில் பூப்படைந்த நிலையில் ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த நிலையில் தன்னை நம்பி வந்த சிறுமியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். 

 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஜெயலட்சுமி தனது தோழிகளான பாலியல் பெண் முகவர்களான அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி , சரவணபிரபு சின்னதம்பி ஆகியோர் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் பாலியலுக்கு உட்படுத்தி வற்புறுத்தியுள்ளனர். 

 

சிறுமியை ஏமாற்றி நாள்தோறும் ஒவ்வொரு நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளியாக தேடப்பட்டு வந்த சிறுமியின் உறவினரான ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் ஆட்கடத்தல் விபச்சார தடுப்பு காவல்துறையினர் பலமுறை பின்தொடர்ந்து கைது செய்ய முயன்றபோது தப்பியுள்ளனர்.

 

இதனையடுத்து மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக அழைத்து சென்று துன்புறுத்துவதாக கூறி வந்த தகவலையடுத்து ஆட்கடத்தல் விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் நேரில் சென்றபோது சிறுமியை மீட்டு சரவணபிரபு என்பவரை கைது செய்தனர். 

 

இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் தேடிவந்த நிலையில் இன்று காலை போலிசார் கைது செய்தனர். 

 

சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 11வயதில் இருந்து சிறுமியை ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பேரும் 600க்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்துள்ளதும், பணம் அதிக அளவிற்கு பெற்றுகொண்டு சிறுமியை பண ஆசை காட்டி ஏமாற்றி வந்துள்ளனர். 

 

சிறுமி என கூறி மாவட்டம் முழுவதிலும் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்துள்ளனர். ஓட்டுனர்கள் முதல் தொழிலாளர்கள், பல்வேறு மாநிலத்தவர்கள் தொழிலதிபர்கள் என 600க்கும் மேற்பட்டோரிடம் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.


பாலியல் தொழில் பெண் முகவர்களான அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு ஆகிய 6 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுனராக சின்னதம்பி தலைமறைவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் உடல்மாற்றங்கள் 70 வயது அளவிற்கு மாறியுள்ளதாக சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

 

சிறுமியிடம் கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரித்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்ய வாய்ப்புள்ளது.

 

மதுரையில் நடைபெற்ற இந்த கொடூர செயலுக்கு பின்புலமாக இருந்தவர்கள் அதற்கு உதவியர்கள் உள்ளிட்டோரை போலிசார் கைது செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.