Advertisment

மாணவி தற்கொலை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

madurai student incident deputy cm ops tweet

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வு அச்சத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் குடும்பத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மதுரையைச் சேர்ந்த மாணவி செல்வி.ஜோதி ஸ்ரீ துர்கா இன்று காலை தற்கொலை செய்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

எதிர்காலத் தூண்களாகிய மாணவச்செல்வங்களின் இதுபோன்ற விபரீதமுடிவுகள் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. மாணவச் செல்வங்கள் மனம் தளராமல் எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

deputy cm ops Tamilnadu Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe