Skip to main content

சென்னை போலீசாரை மிரளவைத்த மதுரை சகோதரிகள்!

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Madurai sisters who the Chennai police!

 

மத்திய-மாநில அரசுளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டம் நடத்துவது, மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நந்தினியின் வழக்கமாக உள்ளது.  சட்டக்கல்லூரி மாணவியாக இருந்தபோதே, மதுக்கடைகளை மூட வேண்டும் என, தனது தந்தையுடன் சேர்ந்து பலமுறை போராட்டம் நடத்தியவர் நந்தினி.  

 

இவரும் இவருடைய தங்கை நிரஞ்சனாவும், கடந்த 13ம் தேதி தேனி பேருந்து நிலையத்தில், “பிரதமர் மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படுகிறது.  அவர்களது வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் ஏழை மக்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்” என்று கூறி துண்டுப்பிரசுரம் விநியோகம்  செய்தனர்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தொண்டர்கள்  அங்கே கூடி போராட்டம் செய்ததால், பரபரப்பு நிலவியது. போலீசார்  தலையிட்டு நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் 20-ம் தேதி காலை,  நந்தினியும் நிரஞ்சனாவும் மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டதை மோப்பம் பிடித்த போலீசார், உடனடியாக  ‘அலர்ட்’செய்தனர்.  எதிர்பார்த்தது போலவே, தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட இருவரும் புறப்பட்டனர்.

 

அவர்களை முன்கூட்டியே மறித்த மாம்பலம் போலீசார், நேராக எழும்பூர்  ரயில் நிலையம் அழைத்துச் சென்று, மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.  அதிலும், ரயில் புறப்படுகிற நேரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்குவதாகக் கூறி, நிரஞ்சனா கீழே இறங்கியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி ரயிலில் ஏற்றிவிட்டனர்.   ரயில் கிளம்பியபிறகே ‘அப்பாடா’ என காக்கிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.