madurai school student wrote letter to virudhunagar collector

மக்களிடமும்மாணவர்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவித்திருந்தார். அதன்படி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நவம்பர் 17 முதல் 27 ஆம்தேதி வரை முதலாமாண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பாளர்கள் என ஏராளமானோர் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

Advertisment

இந்நிலையில், மதுரை மாவட்டம் சின்னாரெட்டிபட்டியில்உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் படிக்கும் 4 ஆம் வகுப்பு மாணவி கு.காவியதர்ஷினி,விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு, "விருதுநகர் முதல் புத்தகத்திருவிழாவில் மகத்தான வெற்றி சாதனை படைத்த உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் தங்களோடு பணியாற்றிய அனைவருக்கும் எங்களுடையஅன்பான வாழ்த்துகள்" எனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Advertisment

இந்தக் கடிதத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியும், "முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழா குறித்ததங்களது வாழ்த்து மடல் கிடைக்கப்பெற்றதுமிக்க மகிழ்ச்சி. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்களுக்கான லட்சியம் ஒன்றைநிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதை அடைய முயற்சிக்கும்போதுவரும் தடைகளைவிடாமுயற்சியுடன் எதிர்கொண்டு இலட்சியத்தை அடைந்து வாழ்வில் வெற்றிபெற்று சந்தோஷமாகஇருங்கள். அனைவருக்கும்இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்" எனத்தெரிவித்து பதில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகிவருகிறது. ஏற்கனவே மாணவர் ஒருவர் மழையின்போதுபள்ளிக்கு விடுமுறை கேட்டதற்கு, திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் "பாலே இங்க தேறல.. பாயாசம் கேட்குதா.." என்று பதிலளித்து இருந்தார். இதேபோன்று மற்றொரு மாணவரின்கேள்விக்கு, நாளை பள்ளிக்குச்செல்ல சைக்கிளைதயாராக வைத்திருங்கள்என்று பதிவிட்டு இருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.