Skip to main content

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் அதிகாரி பணியிடை நீக்கம்?

Published on 21/04/2019 | Edited on 21/04/2019

 


மதுரையில் மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள்  மதுரை மருத்துவக்கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  

 

s

 

 இந்நிலையில் பெண்  அதிகாரி ஒருவர் நேற்று வாக்குப்பதிவு ஆவணங்கள் உள்ள அறைக்குள் சிலருடன் நுழைந்ததாகவும்,  அவர் அங்கே 2 மணி நேரம் இருந்ததாகவும், முக்கிய சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாகவும் தகவல் பரவியது.  இதையடுத்து எதிர்க்கட்சியினர் அங்கே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

s


மதுரை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் மர்மநபர்கள் புகுந்ததாக புகார் எழுந்ததையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.   அப்போது  அந்த பெண் அதிகாரி, கலால்வரி தாசில்தாரான சம்பூர்ணம் என்பது தெரியவந்தது.    அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியிருந்த நிலையில், சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

 

சார்ந்த செய்திகள்