Advertisment

மதுரையில் வெளுத்து வாங்கும் மழை!

ddd

மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில நாட்கள் இந்த மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தீபாவளிக்கு முதல் நாள் தொடங்கி, தற்போது வியாழக்கிழமை வரை, மதுரையில் மழை வெளுத்து வாங்கியது. வியாழக்கிழமை காலையில் தொடங்கிய மழையினால் மதுரை பெரியார் பேருந்து நிறுத்தம், வடக்கு மாசி உள்பட 4 மாசி வீதிகளிலும்மழை தண்ணீர் தேங்கி ஆறாகக் காட்சியளித்தது. சாலைகளில்பெருக்கெடுத்து தண்ணீர் செல்வதாலும் தொடர் மழையாலும்பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானர்கள்.

Advertisment

மேலும், வாகனங்களில் தண்ணீர் புகுந்து ஸ்டாட் ஆகாமல் நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக, மேலும், சில நாட்கள் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

madurai rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe