Skip to main content

மு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் தேர்தல் பயம்!- அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு!  

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

மதுரை தத்தனேரி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  செய்தியாளர்களைச் சந்தித்தார். “இத்திட்டத்தின் மூலம் மதுரை தூய்மையான நகரமாக, குப்பையில்லா நகரமாக, குப்பைத்தொட்டி இல்லா நகரமாக மாற்றப்படும். இதன்மூலம் தொன்மையும், பழமையும் சேர்ந்த புதுமையான நகராக மதுரையை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  
 

தமிழக அரசைக் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின். மீட்பு பணி நடைபெற்ற இடத்திற்கு முதல்வர் வரமுடியாத சூழ்நிலையில் துணைமுதல்வரை அனுப்பிவைத்தார். மூன்று நாட்களும் துணைமுதல்வர் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை கவனித்தார். குழந்தை சுஜித் மீட்பு பணி விவகாரத்தில் மனசாட்சியை அடகுவைத்து விட்டு தமிழக அரசைக் குற்றம் குறை சொல்லி வருகிறார் ஸ்டாலின். 

MADURAI MINISTER SELLUR RAJU SPEECH


தமிழக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு மனசாட்சியே இல்லாத எதிர்க்கட்சித்தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். தீபாவளியைக்கூட  கொண்டாட முடியாமல் புறந்தள்ளிவிட்டு குழந்தை சுஜித் மீட்பு பணியில் அமைச்சர்கள் முழு நேரமும் ஈடுபட்டனர். குழந்தையை மீட்கும் பணியில் அரசின் அத்தனை துறைகளும், அமைச்சர்களும் முழுமையாக ஈடுபட்டனர். அனைத்து தொழில்நுட்பங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. 
 


தமிழக அரசின் மீட்புப்பணியைக் கண்டு சுஜித்தின் தாய் தந்தையே அரசைப் பாராட்டுகின்றனர். ஆனால் அதிமுகவுக்கு புகழ் சேர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் வேண்டுமென்றே அரசைக் குறை கூறி வருகிறார். நெல்லையில் கண்முன்னே உயிருக்குப் போராடிய காவலருக்கு தண்ணீர் கூட தந்து உதவாத ஆட்சி திமுக ஆட்சி. உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.  






உள்ளாட்சித்தேர்தலை தற்போது நடத்துவதற்கு ஸ்டாலினே பயப்படுகிறார். இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவைக் கண்டபிறகு உள்ளாட்சித்தேர்தலைக் கண்டு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். கடந்த 10 நாட்களாக உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஸ்டாலின் எதுவுமே பேசவில்லை.” என்றார் அதிரடியாக. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.