Madurai Maduthavani Omni Bus driver incident

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணியில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்கும் ஆம்னி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் பேருந்து நிறுவனத்திற்குத் தெரியாமல், பயணிகளைப் பேருந்தில் ஏற்றி பணத்தை ஆன்லைன் பரிவர்தனை மூலம் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

Advertisment

இது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குத் தெரியவர, அந்நிறுவனத்தின் அலுவலர்களும், ஊழியர்களும் சேர்ந்து ஓட்டுநரை ஜன்னலில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரும் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் பலரும் இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதற்கிடையே தனிப்படை போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

Advertisment

அதே சமயம் மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் ஒருவரைக் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.