madurai incident

Advertisment

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குண்ணத்தூர் மலைப் பகுதியின் பின்புறம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், வாட்டர் பம்ப் இயக்கும் தொழிலாளி முனுசாமி ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

கருப்பாயூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலைகள் முன் விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக நடந்ததா? என்பதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.