Skip to main content

கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
Fish farming



தமிழகத்தில் கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் விட, வணிக ரீதியாக மீன் வளர்க்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 

மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்
 

" மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இதனால் நீர்நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை.இதனால் மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.மதுரை மாவட்டத்தில் இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீர்யின்றி பாலைவனமாக மாறிவிடும்.நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்,மேலும் நீர்நிலைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களால் நீர் நிலத்தடிற்குள் செல்லாமல் நீரோட்டம் தடைபடுகிறது.மதுரை வண்டியூர் கண்மாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அதிகாரிகள் துணையுடன் பட்டாவும் வழங்கபட்டுள்ளது.
 

வண்டியூர் கண்மாய் முழுவதும் மாசடைந்துள்ளது.மதுரை மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மாவட்டத்தில் கழிவு நீர் குடிநீருடன் கலப்பதை தடுக்கும் விதமாக கழிவு நீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களை குறிப்பிட்ட இடைவெளி தொலைவில் அமைக்க வேண்டும்.


எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
 

முந்தைய விசாரணையின் போது நீர்நிலைகளின் மையபகுதியில் முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் இருந்தால் நோட்டீஸ் கொடுக்காமல் கூட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் கருத்து கூறியிருந்தார்.
 

தமிழகத்தில் நீர்நிலைகள்,நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பு சொத்துக்களை பத்திரபதிவு செய்து பட்டா வழங்க கூடாது என பதிவுதுறை தலைவர் அனைத்து மாவட்ட பதிவாளருக்கு சுற்றறிகை அனுப்ப வேண்டும்.மேலும் தமிழகத்தில் நீர்நிலைகள்,நீர்வழி பாதைகளில் கழிவு நீர்,பிளாஸ்டிக் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.
 

இந்த மனு நீதிபதிகள் ராஜா,கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர் வழக்கறிஞர் கூறுகையில்,  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, வாலிநோக்கம்,கடலாடி, போன்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்குள்ள நீர்நிலைகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். கண்மாய்,குளங்களில் மீன் வளர்க்க ஏலம் எடுத்தவர்கள்,மீன் பிடிப்பதற்காக குளத்து நீரை வீணாக வெளியேற்றி விடுகின்றனர்.மேலும் பல இடங்களில் தொழில் போட்டி காரணமாக. குளத்தில் விஷம் கலந்து நீர் மாசு ஏற்படுத்துகின்றனர்.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 
 

இதனையடுத்து தமிழகத்தில் கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் விட, வணிக ரீதியாக மீன் வளர்க்க இடைகால தடைவிதித்து வழக்கினை நாளை நவம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.