நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் அரசிடம் உரிய விளக்கம் பெற்றுதெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgbhg.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். இவர், உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், ‘ தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில்பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்புகள்நடத்திட தமிழகம் முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் 100மையங்கள் தொடக்கம் முதல் செயல்பட்டு வருவதால் மீதமுள்ள 312 இடங்களில்நீட் பயிற்சி மையம் அமைத்திடும் வேலைகள் நடைபெற்றன. நீட் பயிற்சி மையத்திற்கென அரசு சார்பில் ஆசிரியர், கணினி பொருட்கள் என அனைத்துவசதிகளுக்கும் அரசு சார்பில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட்பயிற்சிக்காக கருவிகள் வாங்கியதாகவும், முதுகலைப்பட்டம் பெற்ற 7ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தி மதிப்பூதியம் வழங்கியதாகவும் போலித்தகவல் தயார் செய்து, அரசிடம் கணக்கு ஒப்படைத்து தலைமைஆசிரியர் பண மோசடி செய்துள்ளார். அவ்வாறு, ஆசிரியர்கள் யாரும் பணியில்அமர்த்தப்படவில்லை. இதுகுறித்து, தகவல் உரிமை சட்டத்தின் மூலம் விபரங்களைப் பெற்றும், பண மோசடி குறித்து மனு அளித்தும் தலைமைஆசிரியர் மீது இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இத்தகைய மோசடிகளால்தான், வறுமையில் பின்தங்கிய , நல்லமதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியினால் தவறானமுடிவெடுத்து விடுகின்றனர். எனவே, பண மோசடியில் ஈடுபட்ட தலைமைஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக் கல்விதுறை இணைஇயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் இன்று விசாரணைக்குவந்தது, அப்போது வழக்கு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்றுதெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கை நாளைநவம்பர் 5 -ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)