Advertisment

“என் காதலை பிரிச்சிட்டிங்க, இப்போ உங்களுக்கு சந்தோஷமா” எனக் கேட்டுவிட்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்!

madurai girl coimbatore boy love issue

மதுரை மாவட்டம், தேனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகளான 22 வயது நந்தினிக்கு,முகநூலில் கோவையைச் சேர்ந்த 20 வயது நிறைந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

Advertisment

பின்னர், அந்த இளைஞர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு செல்ஃபோன் நிறுவனத்தில், நந்தினிக்கு வேலை வாங்கி தந்திருக்கிறார்.சேரன் மாநகரில் உள்ள பெண்கள் விடுதியில் அவர் தங்குவதற்கு அறையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

Advertisment

பின்னர் இருவரும் சந்திப்பதும், வெளியே சுற்றுவதாகவும் இருந்துள்ளனர்.இது அந்த வாலிபரின் குடும்பத்திற்குத் தெரிய வந்தபோது, ஆமாம் என்னைவிட 2 வயது அதிகம் கொண்ட பெண்ணையே நான் காதலிக்கிறேன்எனச் சொல்லியிருக்கிறார்.

உடனே அவரின் பெற்றோர் நந்தினியின் பெற்றோரை சந்தித்து, “எங்க பையனைவிட உங்க பொண்ணுக்கு வயசு ஜாஸ்தி. அதுனால உங்கள் மகளை என் பையனிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள்.” எனத் தெரிவித்துள்ளனர்.

இது நந்தினிக்குத் தெரிய வந்தபோது, தனது உறவினர் ஒருவருக்கு ஃபோன் செய்த நந்தினி, “எங்களது காதலைப் பிரிச்சிட்டிங்க,உங்களுக்கு சந்தோஷம் தானே.” என அழுதபடியே ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு,தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது பீளமேடு போலீஸுக்கு தெரியவர நந்தினியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும், இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

Coimbatore madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe