ADVERTISEMENT
கடந்த வாரம் முதல் மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் 24-ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மதுரை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ADVERTISEMENT
இருந்தபோதிலும் மதுரை மாநகராட்சி பகுதியில் அதிகளவில் தொற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 மாத கர்ப்பிணி உட்பட இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்று மட்டும் பத்திரிகையாளர்களில் இரண்டு பேர், காவல் துறையில் 3 பேர், மருத்துவர் செவிலியர் என கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
Show comments