Skip to main content

நடுரோட்டில் நின்று கத்தித் தீர்த்த மகளிர் சிறைக் காவலர்! -தொடரும் கரோனா கொடுமைகள்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

MADURAI CENTRAL PRISON

 

மதுரை மத்தியச் சிறையில், இரண்டு வார்டன்களுக்கும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று, சிறையிலுள்ள குவார்ட்டர்ஸுக்கு திரும்பினார்கள். வீட்டிலேயே, தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

 

ஜெயில் குவார்ட்டர்ஸில் உள்ள வீட்டில் அவர்கள் தங்கியிருந்த விஷயம் உயர் அதிகாரிக்கு தெரிந்ததும், “அவங்க எப்படி குவார்ட்டர்ஸுக்கு வரலாம்?” என்று வானத்துக்கும் பூமிக்குமாக குதித்திருக்கிறார் உயரதிகாரி. ஜெயிலர், ஹெட் வார்டன் என ஒவ்வொருவராக அனுப்பி, “இது உயரதிகாரி உத்தரவு.. நீங்க இங்கே இருக்கக்கூடாது.. உடனே கிளம்புங்க..” என்று குடைச்சல் கொடுத்தார். “நாங்க எங்கே போக முடியும்?” என்று அவர்கள் கேட்டதற்கு, “உங்களுக்கென்றே 4 ஓட்டு வீட்ட ஒதுக்கி வச்சிருக்கோம்..” என்று, உயர் அதிகாரி சொன்னதை ஒப்பித்துள்ளனர், ஜெயிலரும், ஹெட் வார்டனும்.  

 

“அந்த பழைய கட்டடத்த இடிக்கணும்னு ஆர்டரே இருக்கு. பாம்பு, பல்லி அடைஞ்சு பாழடைஞ்சு கிடக்கிற அந்த ஓட்டு வீட்ல மனுஷன் எப்படி குடியிருக்க முடியும்?” என்று  தங்களைத் தனிமைப்படுத்தி இருந்தவர்கள் கேட்க, “நீங்க அங்கேதான் இருக்கணும்.. குவார்ட்டர்ஸ்ல இருந்தா எல்லாருக்கும் பரவும். இல்லைன்னா உங்க சொந்த ஊருக்கு கிளம்புங்க.. இது மேலதிகாரியோட உத்தரவு..” என்று கறார் காட்டியுள்ளனர். வேறு வழியின்றி, அந்த வார்டன் குடும்பம் வரிச்சியூர் பக்கம் உள்ள கிராமத்துக்குப் போனது. இன்னொரு வார்டன், தனது மோட்டார் பைக்கிலேயே திருநெல்வேலி கிளம்பினார்.  

 

சாத்தூர் மகளிர் சிறையில் பணிபுரிந்த முதல் தலைமைப் பொறுப்பிலுள்ள பெண் காவலர் ஒருவர், நிர்வாகக் காரணங்களுக்காக, மதுரை மத்தியச் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை மதுரையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு ‘டிரான்ஸ்ஃபர்’ செய்தார், அந்த உயரதிகாரி. அவரும் கிருஷ்ணகிரி மகளிர் சிறைக்குச் சென்றார். அங்கு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள, அவர் அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவர, அங்கே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். பிறகு, ‘டிஸ்சார்ஜ்’ ஆன அவரை, அந்த ஊர் சாலை ஒன்றில் இறக்கிவிட்டுச் சென்றது ஆம்புலன்ஸ். அடுத்து எங்கே போவதென்றே தெரியாத நிலையில், மதுரை மத்தியச் சிறையின் உயரதிகாரியை ஃபோனில் தொடர்புகொண்டு “இப்ப நான் நடுரோட்ல நிக்கிறேன். நீங்கதானே எனக்கு டிரான்ஸ்ஃபர் போட்டீங்க? எனக்கு ஒரு வழி சொல்லுங்க..” என்று கத்தித் தீர்த்திருக்கிறார். உடனே அந்த மதுரை அதிகாரி, கோயம்புத்தூர் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரத்திடம் பேச, கிருஷ்ணகிரியிலிருந்து கார் ஏற்பாடு செய்து,  சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.    

 

சிறைகளில் பணிபுரிபவர்களே, கரோனா பாதிப்புக்கு ஆளாகும்போது, இத்தனை மோசமான அனுபவங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்றால்,  மனிதநேயம் எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.