Skip to main content

'பாவா இங்கே? பாட்ஷா எங்கே?' - மதுரையை கலக்கும் போஸ்டர்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராடி வரும் நிலையில் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன் என்று சொன்ன ரஜினியை கலாய்த்து சமூக வலைதளங்கள் அனைத்திலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு மீம்ஸ் கிரியேட்ர்ஸ் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Madurai Bawa - Rajinikanth Poster

 



இந்நிலையில் மதுரை நகரில் நடிகர் வடிவேலிடம் உதவியாளராக இருந்த பாவாவின் ஆதரவாளர்கள் 'பாவா இங்கே? ரஜினி எங்கே?... வேண்டாம் என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சி.ஏ.ஏ.,' ஆகிய வாசகங்கள் அடங்கிய போஸ்டரை மதுரை நகரெங்கும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

சேவை நேரத்தில் சேலை செலக்சன்;ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Selection of saree during service; Negligence at primary health facility

மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் நோயாளிகளை காக்க வைத்து விட்டு செவிலியர்கள் சேரி செலக்சன் செய்து கொண்டிருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்காமல் சேலை செலக்சன் செய்வதற்காக சென்றதாக அங்கு வந்த நோயாளிகள் பரபரப்பாக குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்திருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. மருத்துவ உதவிக்காக வந்த சிலர் எடுத்துள்ள அந்த வீடியோ காட்சியில் செவிலியர்கள் அறையில் சேலை வியாபாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கு சேலைகளை தேர்வு செய்ய செவிலியர் அமர்ந்திருந்தார். 'யாம்மா அரை மணி, ஒரு மணி நேரமா நோயாளிங்க காத்திருக்காங்க. இத வியாபாரம் பண்ணதான் நீங்க சம்பளம் வாங்குறீங்களா? ஒரு மணிநேரமா பேஷண்ட வச்சுக்கிட்டு இப்படியா பண்ணுவீங்க' என ஆதங்கத்துடன் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். வீடியோ எடுப்பதை சுதாரித்த செவிலியர் கீழே கிடந்த சேலைகளை எடுத்து பைகளில் போட்டுக்கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.